districts

கடன் தொல்லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

கடன் தொல்லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை சேலம், ஜன.28- கடன் தொல்லை காரண மாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்  துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், அரிசிபாளையம், முத்தையாளர் தெரு வைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவரது மனைவி ரேகா மற்றும் மகள் ஜனனி (15). வெள்ளித் தொழில் செய்து வந்த இவர், வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தொழில் நலிவடைந்ததால், சரிவர கடன் செலுத்த முடியவில்லை. இதனிடையே, வங்கி யில் இருந்து கடனைத் திருப்பி அடைக்குமாறு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மன உளைச்சல டைந்த மூவரும் செவ்வாயன்று அதிகாலை தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.