கோவை, நவ.19- பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை தடுக்க, ரூ.3 கோடியில் நவீன ஸ்பிரிங் தடுப்புச்சுவர் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதிக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சிமலை அடி வாரத்தில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானை கள் முகாமிட்டுள்ளன. அவை இரவு நேரங் களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின் றன. மேலும், விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்ப கண்டன்புதூர் ஆகிய பகுதிகளுக்கு 11 காட்டு யானைகள் கூட்டமாக வந்தன. இதன்பின் அவை விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த தென்னை, வாழை, தக்காளி, வெண்டை, முட்டைக் கோஸ், மஞ்சள் ஆகியவற்றை தின்றன. தொடர்ந்து விளை பொருட்களை மிதித்து சேதப்படுத்திவிட்டு சென்றன. இதனால் விவ சாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நட் டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் பயிர்சேத தீர்வுக்குழு உறுப்பினர் சு.பழனிச்சாமி, விவ சாய சங்க பிரதிநிதிகள் ஆறுச்சாமி, சதா சிவம், லோகநாதன், ஈஸ்வரன், வேணுகோ பால், பழனிசாமி உட்பட பலர் பயிர்சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப் பிக்கும் பட்சத்தில் ஒருவார காலத்துக்குள் உரிய சேத இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனி டையே தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக் கும் வகையில், நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பிரிங் தடுப்புச்சுவர் அமைப்பது என வனத் துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் 4 தனிப்படை குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அவர்கள் மலைஅடிவாரத்தில் திரி யும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக் குள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இருந்த போதிலும் காட்டு யானைகள் மலைஅடி வார புதர்களுக்குள் மறைந்து கொண்டு நள் ளிரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து விடு கின்றன. எனவே, தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு பகுதியாக அய்யாசாமி மலைஅடிவாரத்தில் இருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவுக்கு ரூ.3 கோடி செலவில் நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பி ரிங் வேலியுடன் ஒருங்கிணைந்த தடுப்புச் சுவரை ஏற்படுத்துவது என வனத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பவுன்ஸ் பேக் முறையில் அமைக்கப்படும். மேற்கண்ட தடுப்புச்சுவரை தாண்டி யானைகள் ஊருக் குள் வர முடியாது. மேலும் யானை உயிருக் கும் பாதிப்பு ஏற்படாது. இதுதொடர்பான கருத்துரு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அர சின் ஒப்புதல் கிடைத்த பிறகு உடனடியாக சம் பந்தப்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் அமைக் கப்படும், என்றனர்.