சேலம், நவ.9- சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் 3 பேரை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒரு வருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள் ளது. இந்த குழந்தையை விற்பனை செய்ய ரூ.3 லட்சம் பேரம் பேசி வளர் மதி என்பவர் குழந்தையை சேலம் எடுத்து வந்துள்ளார். மேலும், குழந் தையை வாங்குவதற்கு ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர் லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகி யோர் சேலம் மாவட்டம், சீலநாயக் கன்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந் துள்ளனர். இதுதொடர்பாக மாநகர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலை மையிலான போலீசார், அப்பகுதி யில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட னர். அப்போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் குழந்தை ஒன்றை துணி யால் சுற்றி கொடுத்ததைக் கவனித்த போலீசார், 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதன்பின் அவர்களிடமிருந்து பிறந்து 4 நாட்களான பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங் கிருந்து குழந்தைகள் நல காப்பகத் திற்கு குழந்தை பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசார ணையில், கைது செய்யப்பட்டவர் கள் நாமக்கல் மாவட்டம், குச்சி பாளையம், தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த மதியழகன் (38) - வளர்மதி (25) தம்பதி மற்றும் இவர்களது நண்பர் ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகர், அணைக்கட்டுகள் பகுதியைச் சேர்ந்த குமார் மனைவி லதா (35) என் பது தெரியவந்தது. மேலும், இவர்கள் குழந்தையை யாரிடம் விற்பனை செய்ய வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதன்பின் சட்டவிரோதமாக குழந்தையை கடத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்கக் பட்டனர்.
மேலும், இவர்கள் தொடர்ந்து குழந்தைகளை விற் பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந் துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், கைதான லதா, வளர் மதி இருவரும் குழந்தைகள் விற் பனை செய்யும் இடைத்தரகர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு குழந்தை இல்லை என்றும், பெண் குழந்தை கொடுத்தால் ரூ.5 லட்சம் தருவதாக லதாவிடம் கூறியுள் ளார். லதாவும் தன்னுடைய தோழி யான வளர்மதியிடம் இதுகுறித்து கூறியுள்ளார். வளர்மதி ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் யார் யாருக்கெல்லாம் பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற விவரங்களை சேகரித்தார். அப் போது தான் திருச்செங்கோடு சேர்ந்த ராமராஜன் என்பவரின் மனைவி கஸ்தூரிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ஈரோடு அரசு மருத்துவமனை யில் பெண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதையறிந்த வளர்மதி, கஸ்தூரியை சந்தித்து பேசியுள்ளார். வளர்மதியின் பேச்சில் மயங்கிய கஸ்தூரி, தன்னுடைய குடும்ப விவ ரங்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து வளர்மதியின் பேச் சுக்கு கஸ்தூரி சம்மதம் தெரிவித்துள் ளார். அதன்படி குழந்தையை சேலத் தில் ஒருவருக்கு விற்பனை செய்ய கொண்டு வருவதாக தகவல் கிடைத் தது. இதையடுத்து சாதாரண உடை யில் இருந்த போலீசார் 3 பேரையும் கையும், களவுமாக பிடித்தோம், என் றனர்.