ஈரோடு, பிப்.12- பவானி அருகே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உற்பத்தியில் ஈடுபட்ட தம்ப திக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. ஈரோடு மாவட்டம், பள்ளபாளையம் பேரூ ராட்சி, மல்லம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியில் வசித்து வருபவர்கள் அசோக்குமார், கீதாதேவி தம்பதி. இவர்கள், உரிய அனுமதி பெறாமல் பாலிபேக் நிறுவனம் வைத்து நடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், பள்ளபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார், பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோதி பிரகாஷ், விஏஓ பிரபாகரன் மற்றும் அதிகாரிகள், அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 3 மாதங்களாக உரிய அனுமதி பெறாமலும், மறைமுக மாகவும், இரவு நேரங்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் 3,701 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.25 ஆயிரம் அபராத தொகை வசூலித்தனர். மேலும், அந்த நிறுவ னம் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப் பட்டு, சுவற்றில் எச்சரிக்கை நோட்டீஸ் அறிவிப்பும் ஒட்டப்பட்டது.