districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-6 வரை மதுரையில் நடைபெறுவதையொட்டி, இதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில், நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 173 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக் குழுவின் தலைவராக கே.துரைராஜ், செயலாளராக ஆர்.ரகுராமன், பொருளாளராக ஜி.பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக, கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதி முதல் தவணையாக ரூ.1 லட்சம் மாவட்டக்குழுவின் சார்பில் அளிக்கப்பட்டது.