தருமபுரி, ஜன.22- மார்க்சிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலை வரும், சிஐடியு தொழிற் சங்க தலைவருமான தோழர் கே.எம்ஹரிபட் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் தருமபுரி செங்கொடி புரத்தில் அனுசரிக்கப் பட்டது. தோழர் கே.எம்.ஹரிபட் தனது 18 வயதில் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டார். தொழிற்சங்க ஸ்தாபனத்தை விரிவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஹரிபட், தொழிற்சங்க போராட்டங்களிலும், 1975 ஆம் ஆண்டு அவசர நிலை காலங் களில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 1981 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்திற்கு வந்த அவர், தருமபுரி மாவட்ட செயலாளராக பணியாற்றினார். தருமபுரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்னெடுத்து போரா டிய தோழர் கே.எம்.ஹரிபட்-ன் 22 ஆம் ஆண்டு நினைவுதினம் மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் சனியன்று அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், செங்கொடி புரத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ஹரி பட் உருவப்படத்திற்கு சிபிஎம் மாவட்ட செய லாளர் ஏ.குமார் மலர்தூரி மரியாதை செலுத் தினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவ நாதன், நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, வட்ட செயலாளர் தனுஷன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் பி.ராஜம் மாள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன் உள்ளிட்ட தலை வர்கள் கலந்து கொண்டனர்.