திருப்பூர், மே 2- பெருமாநல்லூர் அருகே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ குமரன் நகரில் ஆழ்குழாய் போடப்பட்டபொழுது ஏற்பட்ட அதிர்வுகளால் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள 22 வீடுகளில் சேதம் அடைந்துள்ளது. ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முட்டி யங்கினறு பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் நகரில் ஆழ்குழாய் அமைக்கும் பணி கடந்த வாரம் நடைபெற்றது. இதனால் ஏற் பட்ட அதிர்வுகளால், ஆதிதிராவிடர் காலனியில் உள்ள 22 வீடு களில் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வடக்கு எம்எல்ஏ கே.என். விஜயகுமார் பாதிப்புக்குள்ளான வீடுகளை பார்வையிட் டார். மேலும், அவிநாசி வட்டாட்சியர் அந்த வீடுகளை ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வ றிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து ஆழ்கு ழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, முட்டியங்கி னறு ஆதிதிராவிடர் காலனியில் 250க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இதுவரை இது போல் நடந்ததில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஸ்ரீ குமரன் நகர் உருவாக்க சைட் போடப்பட்டது. இப்பொழுது தான் இங்கு குடியிருப்புகள் கட்ட தொடங்கியுள்ளனர். சமீபத்தில் போர் போடும் பணி தொடங்கப்பட்ட நாள் முதல் இங்குள்ள வீடுகளில் அதிர்வுகளை உணர முடிந்தது. மேலும், இந்த லைனில் உள்ள 22 வீடுகளிலும் சுவற்றில் பிளவு ஏற்பட்டுள் ளது. சில வீடுகளில் சுவர் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் எப்போது வீடு இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் தான் குடி யிருக்கிறோம். அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.