districts

img

அமராவதி சர்க்கரை ஆலையில் 21 ஆயிரம் டன் கரும்பு அரவை

உடுமலை, மே 20- உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலையில் நடப்பாண்டு தற்போது வரை 21 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள கிருஷ் ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல் பட்டு வருகிறது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவை பருவமாகக்கொண்டு செயல் பட்டு வருகிறது. ஒவ்வொரு சர்க்கரை ஆலையும், ஆலை அர வைக்குத் தேவையான கரும்பை கொள்முதல் செய்து  கொள்வதற்காக அரசால் எல்லைகள் வரையறுக்கப்பட் டுள்ளன. அதன்படி இந்த ஆலைக்கு வரையறுக்கப்பட் டுள்ள எல்லைப்பகுதிகளுக்குட்பட்ட உடுமலை, மடத்துக் குளம், தாராபுரம், பல்லடம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்காரப் பட்டி, பழனி ஆகிய 5 இடங்களில் கோட்ட கரும்பு அலுவ லகங்கள் உள்ளன. அதன்படி நடப்பு ஆண்டான 2021-2022 அரவைப்பரு வத்திற்கு 2 ஆயிரத்து 10 ஏக்கர் கன்னி கரும்பும், ஆயிரம் ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த  ஆண்டு ஆலை அரவைக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் டன்  கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலை யில் 2021-2022 ஆம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று தொடங்கி யது. இந்த ஆலையில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கரும்பு மட்டுமல்லாது தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து வரக்கூடிய சிறிதளவு கரும்பும் அரவை செய்யப்பட்டு வருகிறது. இதன் படி இந்த ஆலையில் தற்போது வரை 21 ஆயிரத்து 130 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது என ஆலை நிர்வாகி கள் தெரிவித்துள்ளனர்.