கோவை, மே 5- மனிதகுல விடுதலையின் விடி வெள்ளியான மாமேதை காரல் மார்க் சின் 205 ஆவது பிறந்த தினம் வெள்ளி யன்று எழுச்சியோடு கொண்டாட்டப் பட்டது. சொத்து சேர்க்கும் பேராசையில் வேட்டை நாயாய் முதலாளித்து சமூகம் இயங்கிக்கொண்டிருக் கிறது. இத்தகையோரின் பேராசை யில், உழைக்கும் வர்க்கம் ஆகப்பெ ரும் சுரண்டலுக்கு உள்ளாகி வரு கின்றனர். இந்நிலையில், மனித குலத் தின் விடியல் மார்க்சியமே என்பதை காலம் உணர்த்தி வருகிறது. உலகம் விரைவில் இதனை ஒப்புக்கொள்ளத் தான் போகிறது. இத்தகைய அச்சத் தின் காரணமாகவே ஆளும் வர்க்கத் தின் கைத்தடிகள் மார்க்ஸ் குறித்து இழிவான பிரச்சாரத்தை முன்னெடுக் கிறார்கள். மனித குலத்தின் விடிய லுக்கான உன்னத தத்துவத்தை உல கிற்கு அளித்த காரல் மார்க்சின் 205 ஆவது பிறந்த தினம் மே.5 உலகெங்கி லும் உழைக்கும் வர்க்கத்தால் எழுச்சி யோடு கொண்டாடப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அளவிலான பயிற்சி பட்டறை கோவை ஹர்ஷா மஹாலில் வெள்ளி யன்று துவங்கியது. முன்னதாக, மாமேதை காரல் மார்க்சின் 205 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் தலைமை வகித்தார். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் செல்லக் கண்ணு, பொதுச்செயலாளர் சாமு வேல் ராஜ், துணை பொதுச்செயலா ளர் பி.சுகந்தி, துணைத்தலைவர்கள் ஆனந்தன், யு.கே.சிவஞானம், பொரு ளாளர் மோகனா, சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தொடங்கிய பயிற்சி பட்டறை நிகழ்வில், “பாசி சம் என்றால் என்ன?” என்ற தலைப் பில் சிபிஎம் கல்வி குழு உறுப்பினர் அன்வர் உசேன், “சாதியம் தகர்த்த இந்திய, தமிழக ஆளுமைகள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஸ்டா லின் ராஜா, “சட்டமும், களமும்” என்ற தலைப்பில் சிபிஎம் உண்மை கண்டறி யும் குழுவின் நிர்வாகி நிர்மலாராணி மற்றும் மூத்த வழக்கறிஞர் பா.ப. மோகன் ஆகியோர் உரையாற்றினர்.
சேலம்
சேலம் சிறை தியாகிகள் நினைவ கமான மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு அலுவலகத்தில் உள்ள தோழர் கார்ல் மார்க்ஸ் உருவச் சிலைக்கு சிபிஎம் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்தி ரன், கே.ஆர்.கணேசன் ஆகியோர் உரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குண சேகரன், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல சிஐடியு சேலம் மாவட் டக்குழு அலுவலகத்தில் எஸ்.கே. தியாகராஜன் தலைமையிலும், சேலம் கூட்செட் முன்பு சுமைப்பணி தொழி லாளர் சம்மேளன தலைவர் ஆர்.வெங் கடாபதி தலைமையிலும் மார்க்ஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட் டது. மேட்டூர் சிஐடியு அலுவலகத்தில் எஸ்.எம்.தேவி தலைமையில் நடை பெற்ற விழாவில், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் சி.கருப்பண் ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு
மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு அலுவல கத்தில் கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் பி.சுந்தரராஜன் தலை மையில் மார்க்ஸ் படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட் டது. இதனைத்தொடர்ந்து நடை பெற்ற பேரவைக்கூட்டத்திற்கு மாவட் டக்குழு உறுபு்பினர் பா.லலிதா வர வேற்றார். மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மூத்த தோழர் கே.துரை ராஜ், செயற்குழு உறுப்பினர் ஆர். கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பேரவையில் எஸ்.ஏ.ராஜேந் திரன் சிறப்புரையாற்றினார். நிறை வாக, தாலுகா செயலாளர் என்.பால சுப்பிரமணியன் நன்றி கூறினார். பெரி யார் நகர் கிளையில் செயலாளர் பொன்.பாரதி தலைமையில் மார்க்ஸ் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.