districts

img

உதகை 200 நிறைவு: கல்லூரி மாணவர்கள் நடைபயணம்

உதகை, ஏப்.16- உதகையை கண்டுபிடித்து 200 ஆண்டு கள் நிறைவடைந்ததையொட்டி, உதகையில் உள்ள பழங்கால கட்டிடங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களுக்கு கல்லூரி மாண வர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மரபு வழி நடைபயணமாக அழைத்துச் செல்லும் பேரணியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பி னர் ஆ.ராசா கொடியசைத்து துவக்கி வைத் தார். ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆண்ட போது, நீலகிரி மாவட்டத்தை தங்களது ஓய்வு வெடுக்கும் இடமாக கண்டுபிடித்து தேவால யங்கள், நீரூற்றுகள், நூலகங்கள், பள்ளி கட் டிடங்கள் போன்றவை அமைத்தனர். அப்போ தைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சலீவன் உதகைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த கட்டிடங்கள் உதகையை கண்டுபிடித்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பழங்கால கட்டிடங்களான மாவட்ட ஆட்சி யர் அலுவலகம், உதகை அரசு கலைக் கல்லூரி கட்டிடம், ஆதாம் நீரூற்று, அசெம் பளி திரையரங்கம், பிரிக்ஸ் பள்ளி,

நீலகிரி நூலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பழங் கால கட்டிடங்கள் மற்றும் அதன் சிறப்பு கள் குறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும்  சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்று லாத்துறை சார்பில் மரபு வழி நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உதகையை கண்டு பிடித்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி, மரபு வழி நடை பயணத்தை உதகை  அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கொடிய சைத்து துவக்கி வைத்தார். இதைத்தொ டர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகை யில், உதகையை கண்டுபிடித்து 200 ஆண்டு கள் நிறைவடைந்ததையொட்டியும், கோடை சீசனை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. குறிப்பாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள் ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள் ளது. உதகை 200 நிறைவு விழா மற்றும் மலர் கண்காட்சி துவக்கி வைக்கும் விழாவில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரீத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட சுற்றுலாத்துறை உதவி அலுவலர் கோவிந்தராஜ், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கே.பிரபா கர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.