districts

img

சாலப்பாளையம் எஸ்.பி.கந்தசாமி நினைவு தினத்தில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டுக்கு ரூ.2.43 லட்சம் வழங்கல்

திருப்பூர், ஜன.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்குளி தாலுகா மூத்த தோழர்  எஸ்.பி.கந்தசாமியின் 34 ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது. இவ ரது நினைவு தினப் பொதுக் கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.2.43 லட்சம் வழங்கப்பட்டது. ஊத்துக்குளி தாலுகா சாலப்பா ளையம் எஸ்.பி.கந்தசாமி ஒன்றுபட்ட  கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஊத் துக்குளி வட்டாரம் மற்றும் பெருந் துறை தாலுக்கா பகுதியில் பாடுபட்ட வர். விவசாய சங்கத்தை கட்டுவதற் காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். ஒன்றுபட்ட பெருந் துறை தாலுக்காவில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தாலுகா கமிட்டி  உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசா யிகள் சங்க ஈரோடு மாவட்ட நிர்வாகி யாகும் செயல்பட்டவர்.  அவரது 34 ஆவது நினைவு தினத் தையொட்டி ஞாயிறன்று காலை 10  மணியளவில் சாலப்பாளையம் எஸ். பி.கே.தோட்டத்தில் அவரது நினைவி டத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட் டது.  ஊத்துக்குளி தாலுகா செயலா ளர் கு.சரஸ்வதி தலைமை வகித்தார்.  செங்கொடியை பெருந்துறை தாலுகா செயலாளர் ஆர்.அர்ஜு னன் ஏற்றி வைத்தார். மாநில செயற் குழு உறுப்பினர் செ.முத்துக்கண் ணன், ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி ஆகியோர்  நினைவுரை ஆற்றினர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஜெ.கந்தசாமி, அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட பொருளா ளர் ஆர்.மணியன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ப.வண்ணக் கொடி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா பொருளாளர் ச.விக்னேஷ், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தாலுகா கன்வீனர் ச.சசிக்குமார் உள் பட திரளானோர் பங்கேற்றனர். எஸ். கே.கொளந்தசாமி நன்றி தெரி வித்தார்.  அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு இதன் தொடர்ச்சியாக ஞாயிறு மாலை ச.பெரியபாளையம் திடலில்  எஸ்.பி.கந்தசாமியின் 34 ஆம் ஆண்டு  நினைவு தின பொதுக்கூட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் பெரி யபாளையம் கிளைச் செயலாளர் ஆ. மேகநாதன் தலைமை ஏற்க, ஆர். அன்பழகன் வரவேற்றார். இதில் கட் சிக்கு அகில இந்திய மாநாட்டு நிதி  முதல் தவணை தொகை ரூ. 2 லட்சத்து  43 ஆயிரத்து 250-ஐ தாலுகா செயலா ளர் கு.சரஸ்வதி வழங்க கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்  செ.முத்துக்கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற் றினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.குமார், தாலுகா குழு செய லாளர் கு.சரஸ்வதி, தாலுகா குழு உறுப்பினர் கை.குழந்தைசாமி ஆகி யோர் உரையாற்றினர். முன்னதாக திருப்பூர் கிருஷ்ணனின் செம்ப ருத்தி கலைக் குழுவின் இன்னிசை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக ஆர். பொன்னுசாமி நன்றி  கூறினார்.