தாராபுரம், ஜன.23- தாராபுரம் தினசரி சந்தை பகுதியில் ரூ.2.03 கோடி செலவில் புதிதாக வணிக வளாகம் கட்டப்படவுள்ள இடத்தை அதிகாரிக ளுடன் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் ஆய்வு செய் தார். தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 19 ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள தினசரி மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டபட்வுள்ளது. வியாபாரிகள் நலன் கருதி வேறு இடம் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் போன்ற விபரங்கள் குறித்து நகராட்சி அதி காரிகளுடன் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, பழைய சந்தை கட்டப் பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கட்டிடங்களும் பழுதடைந் துள்ளது. மேலும் மழைக்காலங்களில் சந்தை முழுவதும் தண் ணீர் தேங்கி நிற்பதால் வியாபாரிகளும், பொது மக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அனைத்து நகராட்சி உறுப் பினர்களின் ஒத்துழைப்போடு புதிய வணிக கட்டிடம் கட்ட ரூ. 2.03 கோடி அரசிடம் நிதி பெறப்பட்டுள்ளது. அதற்கான பணி கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக தற்போது சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி கடை கள், மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், கோழிக் கடைகள் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.