பட்டாசு குடோனில் வெடி விபத்து 2 பெண்கள் உடல் சிதறி பலி
தருமபுரி, மார்ச் 16- தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்டவெடி விபத்தில், இரண்டு பெண் கள் 200 அடி தூரத்திற்கு உடல் சிதறி பரி தாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் எதிர்பாராத விதமாக வியாழனன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பழனியம் மாள்(50) மற்றும் முனியம்மாள்(65) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். படுகாயமடைந்த சிவாலிங்கம் (52) என்ற பெண் சிகிச்சைக்காக தரும புரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்து நடந்த குடோனில், கோவில் திருவிழா உள்ளிட்ட விழாக் களுக்கு பயன்படுத்தக்கூடிய வான வெடி உள்ளி்ட்ட பட்டாசு ரகங்கள் தயாரிப்பு பணி, தயாரிக்கப்பட்ட பட்டாசு களை சேமித்து வைக்க கூடிய குடோ னாக செயல்பட்டு வந்திருக்கிறது. வெடி தயாரிக்கும் போது எதிர்பாரதவிதமாக இந்த திடீர் வெடி விபத்து நடந்திருக் கலாம் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த விபத்து நடைபெற்ற சம்பவம் அறிந்து, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். வெடி விபத்து நடந்த குடோனில், மொத்தமாக நான்கு பேர் வேலை செய் திருக்கின்றனர். இதில், பழனியம்மாள் மற்றும் முனியம்மாள் இருவர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு உயரிழந்துள் ளனர். காயம்பட்ட சிவாலிங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எந்த வித காயமின்றி சின்ன பொண்ணு (68) என்பவர் உயிர் தப்பியிருக்கிறார். சம்பவ இடத்தில் தடயவியல் போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், பட்டாசு குடோன் உரிமையாளர் சரவ ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.10.70 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை
உதகை, மார்ச் 16- நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண் பாட்டு மையத்தில் முதலா வது நீலகிரி புத்தக திரு விழா-2023 கடந்த 5ஆம் தேதி துவங்கியது. சர்வதேச கணிதவியல் தினத்தையொட்டி, நடிகரும், தமிழ் இலக்கிய பேச்சாளரு மான ஜோ.மல்லூரி தமிழ் “எங்கள் ஞானச் செருக்கு” என்ற தலைப்பிலும் பேசி னார். விழாவில் மேற்கு மண்டல காவல் ஆணையர் சுதாகர், தமிழ் பற்றாளர்கள் கலந்து கொண்டு பேசினர். மார்ச் 13ஆம் தேதி வரை நடந்த புத்தக திருவிழா வில் ரூ.10.70 லட்சம் மதிப் பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
மக்னா யானைக்கு கும்கி யானை உதவியுடன் சிகிச்சை
மேட்டுபாளையம், மார்ச் 16- உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மக்னா யானைக்கு சிகிச்சையளிக்க உதவியாக கும்கி யானை வரவழைக்கப்பட உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆதி மாதையனூர் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் புத னன்று இரவு நுழைந்த மக்னா காட்டு யானை விவசாய நிலத் தில் முகாமிட்டுள்ளது. வாய் பகுதியில் காயத்துடன் நோய் வாய்ப்பட்டு மெலிந்த நிலையில் காணப்படும் மக்னா யானையை அடர் வனத்திற்குள் அனுப்ப வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் அந்த யானை வனத்தினுள் செல்வதும் மீண்டும் விவசாய நிலத்திற்கு திரும்புவதுமாக உள்ளது. இத னால், இப்பகுதி விவசாயிகள் தங்கள் அன்றாட பணியினை மேற்கொள்ள அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தற்போது உடல் நலக்குறைவால் பாதிக் கப்பட்டு உணவோ, நீரோ உட்கொள்ள இயலாமல் தவித்து வரும் யானைக்கு வனத்துறை மருத்துவ குழு மூலம் சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க வசதியாக பொள்ளாச்சி டாப்சிலிப் யானை கள் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரி வித்துள்ளனர். காயமடைந்த யானையினை வனத்துறையி னர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கூட்டுறவு சங்கம் முற்றுகை
இளம்பிள்ளை, மார்ச் 16- சேலம் மாவட்டம், வெள்ளரி வெள்ளி ஊராட்சியில் ஆயி ரக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் ஏராளமான விவசாயிகள் நகை கடன், பயிர்க் கடன் பெற்றதோடு டெபாசிட்டும் செய்து வந்துள்ளனர். இதனி டையே, இந்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மோகன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நகை மற்றும் பணத்தை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இத னையடுத்து அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, அவருக்கு சொந்தமான சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் உத்தரவிடப் பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளரிவெள்ளி கிராம பகுதி யைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தள்ளு படி செய்த நகையையும், டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித்தர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், தனது நகையை அடமானம் வைத்த போது நகையை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு பணம் தரவில்லை, தற்போது பணத்தை வட்டியுடன் செலுத்தினால் மட்டுமே நகையை திருப்பி தரப்படும் என்று கூறுகின்றனர். மேலும், டெபாசிட் செய்த தொகையை தர மறுப்பதாக குற்றஞ்சாட்டினர். இதற்கிடையே விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்று கையிடுகிற தகவலறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களை சமாதானம் செய்து அனைவரையும் அனுப்பி வைத்த னர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.