தருமபுரி, ஏப்.3- ஒகேனக்கல் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப் பகுதியில் காட்டுயானைகள், மான்கள், காட்டு பன்றிகள் என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியிலிருந்து அடிக்கடி உணவு தேடி யானைகள் வெளியே வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் உணவு தேடி ஊருக்குள் வந்த 3 காட்டுயானைகள் மாரண்ட அள்ளி அருகே மின்வேலியில் சிக்கிய பலியா கியது. இதேபோல் கம்பைநல்லூர் அருகே உயர்மின்கம்பி உரசியதில் ஒரு காட்டுயானை உயிரிழந்தது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறிய யானைகள் உயிரி ழப்பு சம்பவம் வனஉயிரின ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஒகேனக்கல் வனப்பகுதியில் போடூர் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந் தது. இதனை திங்களன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இது குறித்து உடனடியாக வனத்துறை யினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர். அங்கு 10 வயது மதிக் கதக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது தெரிய வந்தது. இதேபோல் கோடுப்பட்டி பகுதியில் ஒரு பெண் யானையும் இறந்து கிடந்தது. இதனை யும் வனத்துறை மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த 2 யானைகள் அடையாளம் தெரியாத முறையில் இறந்து கிடந் தது தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறை, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.