districts

img

ஏப்ரல் 14 முதல் 24 ஆம் தேதி வரை 18 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா

திருப்பூர், மார்ச் 23- திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து 18 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா - 2022 ஐ, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 11 நாட்கள் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், இந்த புத்தகத் திரு விழாவை வெற்றிகரமாக நடத்து வதற்கு 194 பேர் கொண்ட வர வேற்புக்குழு அமைக்கப்பட்டுள் ளது.  திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் அருகில் கே.ஆர்.சி. சிட்டி சென் டரில் செவ்வாயன்று மாலை புத்த கத் திருவிழா வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் அரிமா எம்.ஜீவா னந்தம் தலைமையில் நடைபெற் றது. பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் ஆர்.ஈஸ்வரன் வரவேற்றுப் பேசி னார்.  இக்கூட்டத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டி ருந்த திருப்பூர் புத்தகத் திரு விழாவை, இந்த ஆண்டு  சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது. அதன்படி 18ஆவது திருப் பூர் புத்தகத் திருவிழா வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 11 நாட்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. 

வரவேற்புக்குழு நிர்வாகிகள்

இந்த ஆண்டு 18ஆவது திருப் பூர் புத்தகத் திருவிழாவை வெற்றி கரமாக நடத்துவதற்கு வரவேற்புக் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பட்டியலை புத்தகத் திருவிழா குழு சார்பில் ஆ.நிசார் அகமது முன் வைத்தார். அதன்படி, வரவேற்புக் குழுத் தலைவராக வழக்கறிஞர் பி.மோகன், செயலாளராக ஆர்.ஈஸ்வரன், பொருளாளராக எஸ்.சுப்ர மணியன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இத்துடன் 38 பேர் வர வேற்புக்குழுத் துணைத் தலைவர் களாகவும், 41 பேர் இணைச் செய லாளர்களாகவும் தேர்வு செய்யப் பட்டனர். இந்த நிர்வாகிகளுடன் 112 உறுப்பினர்களுடன் மொத்தம் 194 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.  புத்தகத் திருவிழா தொடர்பான பல்வேறு பணிகளை செயல்படுத்து வதற்கு மொத்தம் 15 குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. குறுகிய கால அவகாசத்தில் இந்த புத்தகத் திருவிழா நடத்தும் நிலை இருந்தா லும், அனைத்து வகையிலும் வழக் கத்தை விட சிறப்பான முறையில் இந்த மக்கள் பண்பாட்டுத் திரு விழாவை வெற்றிகரமாக  நடத்து வது என்றும் இக்கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டது.

காலமான நிர்வாகிகளுக்கு அஞ்சலி 

முன்னதாக, திருப்பூர் மாநகரில் முதலாவது புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டதில் இருந்து புத்த கத் திருவிழாக்களை சிறப்பாக நடத் துவதற்கு பல்வேறு வகையிலும் பக்க பலமாக இருந்து முனைப்பு டன் செயல்பட்டு வந்தவர்கள், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், யுனிவர்சல் பள்ளி தாளாளர் எஸ்.ராஜகோபால், எம். கோவிந்தராஜுலு மற்றும் சூர்யா ஜூவல்லர்ஸ் சுகுமார் ஆகி யோரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில் யுனிவர்சல் பழனிசாமி, பிரிண்டிங் குமாரசாமி, கேரவன் ஆறுமுகம், மோகன் கார்த் திக், பின்னல் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் கே.காமராஜ், டி.கே.டி. பர்வினா சௌகத் அலி, வி.டி.சுப்பிர மணியம், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், அனிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.