districts

வெளி மாநில பேருந்துகளுக்கு ரூ.18.57 லட்சம் அபராதம்

வெளி மாநில பேருந்துகளுக்கு ரூ.18.57 லட்சம் அபராதம் தருமபுரி, அக்.29- தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்துத் துறையி னர் ஆய்வு மேற்கொண்ட தில், வரி செலுத்தாத வெளி  மாநிலங்களைச் சேர்ந்த 26  பேருந்துகளுக்கு ரூ.18.57 லட் சம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், தொப் பூர் சுங்கச்சாவடியில் இணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தலைமையில், வேலூர் சரகத்துக்குட்பட்ட தருமபுரி, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் வட் டார போக்குவரத்து அலுவ லர்கள், மோட்டார் வாகன  ஆய்வாளர்கள் ஆகியோர்  சோதனை நடத்தினர். அவ் வழியாக வரி செலுத்தாமல் வரும் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையின்போது 26  வெளிமாநில ஆம்னி பேருந் துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, அர சுக்குச் செலுத்த வேண்டிய வரி ரூ.5.08 லட்சம், இணக்க கட்டணமாக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.6.08 லட்சம் வசூ லிக்கப்பட்டது. இச்சோத னையில் 6 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் பறி முதல் செய்யப்பட்டு அர சுக்கு செலுத்த வேண்டிய வரி ரூ.11.84 லட்சம், இணக்க  கட்டணம் ரூ.65 ஆயிரம் என மொத்தம் ரூ.12.49 லட் சம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.18.57 லட்சம் அபராதம் விதித்து, வசூ லிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு வெளிமாநில ஆம்னி பேருந்துகள் அதிக ளவில் இயக்கப்படுகின்றன. அரசுக்கு வரி செலுத்தாமல் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது  சோதனை தீவிரப்படுத் தப்படும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.