சேலம், ஜன.22- மக்கள் கோரிக்கையை நிறைவேற்றாத சேலம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஜன.26 ஆம் தேதியன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்ற 18 கிராம மக்கள் முடிவு செய்துள்ள னர். சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட செந்திட்டு கிராமத்தில் சாலை வசதி கேட்டு பல கட்ட போராட்டங்கள் 18 கிராம மக்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. 150 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப் பட்டு வந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கட்ட போராட் டங்களை நடத்தி வந்த மக்கள், அண்மை யில் கொட்டச்சேடு பகுதியில் பெருந்திர ளான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உரிய தலையீடு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த 18 கிராம மக்களின் முக்கிய கோரிக்கை, மேனாங் குழி முதல் லட்சுமி எஸ்டேட் வரை, சேர்வ ராய்ஸ் ஆறாம் எண் பீல்டு வழியாக கொட் டச்சேடு பகுதிக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்பதாகும்.
நன்மை என்ன?
18 கிராம மக்களின் கோரிக்கையை அரசு ஏற்றால், அப்பகுதிக்கு பொதுமக்கள் எளி தில் செல்ல முடியும். பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிவர தேவையில்லை. அவ சர காலங்களிலும், பள்ளி, கல்லூரி செல் லும் மாணவர்கள் எளிதில் கொட்டச்சேடு பகுதியை அடைய முடியும். பிரசவ காலங் கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படும்பொழுது தற் போது உள்ள சாலையை சுற்றி செல்லும் நேரம் அதிகமாகிறது. பல நேரங்களில் கர்ப் பிணிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இச்சாலை அமைந்தால், உயிரிழப்புகள் குறையும்.
அரசின் நிலைபாடு
சேலம் மாவட்ட நிர்வாகம் தொடர்ச்சி யாக 18 கிராம மக்களின் கோரிக்கையை ஏற்காமல், ஏழாம் எண் சாலையை அமைக்க முயற்சித்து வருகிறது. அந்த சாலை அமைத்தால் ஒரு கிராம மக்கள் மட் டுமே பயன்பெறுவார்கள். மேலும், தனியார் எஸ்டேட் பாதிக்காது. இந்த நிலையை எடுத்து, தனியார் முதலாளிகளுக்கு ஆதர வாக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவர்கள் கோரிக்கை
கடந்த காலங்களை போல் இல்லாமல் தற்போது பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை இந்த 18 கிராம மக்களிடம் அதிகம் இருந்து வருகிறது, ஆனால், சரியான சாலை வசதி இல்லாததால் முறையான பேருந்து வசதி இல்லை எனவும், ஆறாம் எண் சாலையை அரசு நிர்வாகம் அமைத்து தர வேண்டும். அப்படி தந்தால் எங்களின் கல்வி முன் னேற்றம் அடையும் எனவும் தெரிவித்த னர். மேலும், மக்களுக்காக சேவையாற்ற வேண்டிய மாவட்ட நிர்வாகம், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக நடந்து வரு வது கண்டனத்திற்குரியது என அப்பகுதி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிஐடியு வழக்கு
கொட்டச்சேடு வழித்தடம் சம்பந்தமாக சேலம் மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் பல கட்ட போராட் டங்கள் நடைபெற்றுள்ளது. இருப்பினும் இதுவரை மாவட்ட நிர்வாகம் செவி சாய்க் காத நிலையில், கடந்த ஜன.14 ஆம் தேதி யன்று சிஐடியு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியருக்கு எதிராக தீர்மானம்
இந்நிலையில், ஞாயிறன்று செந்திட்டு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் செந் திட்டு, அரங்கம், பலாக்காடு உள்ளிட்ட 18 கிராம மக்களின் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், சிஐடியு சாலை போக் குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் பிரச்சனை சம்பந்தமாக உரையாற்றினார். இக்கூட்டத் தில், சேலம் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஆதரவு அளிக்காமல் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக பேசி வருவதை கண்டித்து குடியரசு தினமான ஜன.26 ஆம் தேதியன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் 18 கிராமங்களி லும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தீர்மா னம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள் ளது.
-எழில், சேலம்.