நீலகிரி, பிப்.5- நீலகிரியில் கடந்த 8 நாட்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17.94 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை யடுத்து, கடந்த 27 ஆம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்திலுள்ள 8 சோதனைச் சாவடிகளிலும் வாகன தணிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக் குள் வரும் வாகனங்கள், நாடுகாணி மற்றும் கக்கநல்லா சோதனைச் சாவடியில் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வரு பவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வரு கிறது. அந்த வகையில், வெள்ளியன்று ரூ.79 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 8 நாட்களில் நீலகிரி மாவட் டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.17 லட்சத்து 94 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.