districts

img

வஞ்சிபாளையத்தில் 17 தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு

அவிநாசி, நவ.14 - அவிநாசி அருகே வஞ்சிபாளையம் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவை கூட்டத்தில் 17 தீக்கதிர் சந்தா ஒப்படைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு, கிளை அலுவலக கட்டிடப் பணி, செந்தொண்டர் பேரணி உள்ளிட்டவை குறித்து பேரவை கூட்டம் புதுப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் கே. குமரவேல் தலைமையில், கிரேஸ் கார்டன் பகுதியில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் வஞ்சிபாளையம் வடக்கு, தெற்கு, சௌடாம்பிகை நகர், முருகம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காமராஜிடம் முதல் கட்டமாக 17 தீக்கதிர் சந்தாவுக்கான தொகை ஒப்படைக்கப்பட்டது. அத்துடன்  இப்பகுதிகளில்  புதிதாக பனியன் தொழிலாளர்களை சந்தித்து, சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத்தில் 100 உறுப்பினர் பதிவு செய்யப்பட்டனர்.

இந்த சந்தா தொகையும் கே.காமராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சௌடாம்பிகை நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை அலுவலக  கட்டிடம் கட்டுவது குறித்து தீர்மானிக்கப்பட்டது. இதற்கு  வஞ்சிபாளையம் தெற்கு  ஒரு லட்சம் ரூபாய், வஞ்சிபாளையம் வடக்கு இரண்டு லட்சம் ரூபாய், சௌடாம்பிகை நகர் 2.50 லட்சம் ரூபாய், பொன்ராம்புரம் ஒரு லட்சம் ரூபாய், முருகபாளையம் ஒரு லட்சம் ரூபாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் மோகனசுந்தரம் குடும்பம் 50 ஆயிரம் ரூபாய், புதுப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் 50 ஆயிரம் ரூபாய் நிதியளிப்பதாக உறுதியளித்தனர். நவ.27 செந்தொண்டர் பேரணியில் 100க்கும் மேற்பட்டோரை பங்கேற்க வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் பி.முத்துசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வஞ்சிபாளையம் பகுதி கிளை செயலாளர்கள், ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.