திருப்பூர், டிச.29- திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசி யேசன் நடத்தும் 16ஆவது கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி “கன்ஸ்ட்ரோ மெகா 21 - 22” வெள்ளியன்று தொடங்கி ஜனவரி 3ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறு கிறது. திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த் திக் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சி அரங்கை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தொடங்கி வைக் கிறார். இந்த கண்காட்சியில் மொத்தம் 200 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் கட்டிடத்திற்குத் தேவையான சிமெண்ட், கம்பி, எலக்ட்ரிக் பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், கதவு ஜன்னல்கள், பெயிண் டிங் பொருட்கள், டைல்ஸ், கிரானைட், எஸ்எஸ் கைப்பிடிகள், யூபிவிசி பொருட் கள், மாடுலர் கிச்சன், ரூபிங் சீட், ரெடி மிக்ஸ் கான்கிரீட், சூரிய சக்தியில் இயங்கும் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், மின் தூக்கிகள் உள்பட கட்டுமானம் சார்ந்த அனைத்து பொருட்களும் அரங்குகளில் இடம் பெறுகின்றன. கட்டுமான தொழில் சார்ந்த நவீன நுட்பங்களும் இங்கு வைக்கப் படுகின்றன.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பார்வையாளர் களுக்கு அனுமதி இலவசம். தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முதல் நாள் நிமிர்வு கலையகத்தின் பறை இசை, போதிதர்மர் கலைப் பள்ளியின் சிலம் பாட்டம் நடைபெறுகிறது. இரண்டாம் நாள் சனியன்று பொறியாளர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியமும், ஞாயி றன்று யோனாவின் மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் முதல் மூன்று நாட் கள் மாலை வேளையில் வர்மா, அக்குபஞ் சர், சித்தா, ஆயுர்வேதா, ஹோமியாபதி, யுனானி மருத்துவ சிகிச்சை, ஆலோசனை முகாமும், நான்கு நாட்களும் காலை முதல் மாலை வரை இலவச மரக்கன்றுகள் வழங் கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. கட்டிடம் கட்டுவோர், எதிர்காலத்தில் கட் டத் திட்டமிடுவோர், சிறந்த கட்டுமான சாத னங்கள், நுட்பங்களை நேரடியாக தெரிந்து ஒப்பந்தம் செய்து கொள்ளவும், திருப்பூர் மக்களுக்கு ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக வும் இந்த கண்காட்சி நடைபெறும். ஆயிரக் கணக்கானோர் இதை பார்த்து பயனடைவர் என்று எதிர்பார்ப்பதாக இந்த கண்காட்சி செயலாளர் கே.ராதாகிருஷ்ணன், ஒருங் கிணைப்பாளர் சௌ.ஸ்டாலின்பாரதி ஆகி யோர் புதனன்று தெரிவித்தனர்.