districts

img

சக்தி ஆட்டோ காம்போனன்ட் நிறுவனம் தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ்

திருப்பூர், நவ. 7 – திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம் பாளையத்தில் செயல்பட்டு வரும் சக்தி  ஆட்டோ காம்போனன்ட் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர், ஊழி யர்களுக்கு இந்த ஆண்டு 16.66 சதவிகி தம் போனஸ் வழங்குவதென உடன் பாடு ஏற்பட்டுள்ளது. சக்தி ஆட்டோ காம்போனன்ட் நிர்வா கத்திற்கும், சிஐடியு சங்க நிர்வாகிக ளுக்கும் இடையே ஐந்து சுற்றுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் நிறை வாக செவ்வாயன்று இந்த உடன்பாடு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக் கியமான இன்ஜினியரிங் தொழிற்சா லையான சக்தி ஆட்டோ காம்போனன் டில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் கள் 1200க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டுக்கான போனஸ் பேச்சு வார்த்தை கடந்த அக்டோபர் 26ஆம்  தேதி தொடங்கியது. ஒவ்வொரு கட்ட மாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக ஐந்தாவது கட்டமாக  செவ்வாயன்று சக்தி ஆட்டோ காம்போ னன்ட் நிறுவனத் தலைவர் மயில்சாமி முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்த உடன்பாடு கையெ ழுத்தானது. கடந்த ஆண்டு பெறப்பட்ட  11 சதவிகித போனஸ் தொகையை  விட இந்த ஆண்டு 5.66 சதவிகிதம் கூடுத லாக சேர்த்து 16.66 சதவிகிதம் பெறப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேச்சுவார்த்தையில் நிர் வாகத்தரப்பில் தொழிலுறவு மற்றும் நலன் பிரிவு பொதுமேலாளர் கே. ஆர்.ராஜேந்திரன், மனிதவளம் பொது மேலாளர் கே.தமிழரசன் ஆகியோர் பங் கேற்றனர். சிஐடியு தரப்பில் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு இன் ஜினியரிங் சங்கத் தலைவர் ஆர்.பழ னிச்சாமி, செயலாளர் ஜெ.கந்தசாமி, பொருளாளர் வி.காமராஜ், துணைத் தலைவர்கள் எஸ்.தேவராஜ், கே.கண் ணையன், துணைச் செயலாளர்கள் ஆர்.சிவராஜ், எஸ்.கே.சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போனஸ் உடன்பாடு ஏற்பட்ட  நிலையில், சிஐடியு சார்பில் தொழிலா ளர்களிடம் விளக்கி கூட்டம் நடத்தப்பட் டது. இதில் பெருந்திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.