நாமக்கல், ஜூன் 25- பரமத்திவேலூர் அருகே பாக்கு தோப்பிலிருந்த ஆயிரத்து 500 மரங் களை அடையாளம் தெரியாத நபர் கள் வெட்டி சென்ற நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் சவுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பு சின்ன மருதூர் அருகே வெங்கச்சல்லிக் காட்டில் அமைந்துள்ளது. சுமார் 2 ஏக்கரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 1500 பாக்கு மரங்கள் நடவு செய்து, கடந்த 3 ஆண்டுகளாக பராம ரித்து வந்துள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று அதி காலை அடையாளம் தெரியாத நபர் கள் சிலர், பாக்கு மரங்களை வெட்டி சாய்த்து விட்டதாக அருகே உள்ள தோட்டத்துகாரர்கள் சவுந்தர் ராஜனுக்கு தகவல் தெரிவித்துள் ளனர். இதனையடுத்து நேரில் வந்த பார்த்து அதிர்ச்சியடைந்த சவுந்தர் ராஜன், இதுகுறித்து ஜேடர் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமை யிலான போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடவியல் நிபுணர்களை வரவ ழைத்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். கடந்த மார்ச் 11 ஆம் தேதி யன்று அப்பகுதியில் இளம் பட்ட தாரி பெண் ஒருவர் பாலியல் வன் கொடுமையால் கொலை செய்யப் பட்ட பிறகு, அப்பகுதியில் தீ வைப்பு சம்பவம், தோட்டத்திற்கு பயன் படுத்தும் மோட்டார்களை சேதப் படுத்துவது, வாழை மரங்களை வெட்டி சாய்ப்பது உள்ளிட்ட சம்ப வங்கள் நடைபெற்று வருவது குறிப் பிடத்தக்கது.