districts

img

வயல்வெளியில் 15 அடி நீள மலைப்பாம்பு

தருமபுரி, அக்.30- பாலக்கோடு அருகே வயல்வெளியில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்த னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மொரப்பூர் காப்பு காட்டிலிருந்து இறைதேடி மேல்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா (55) என்பவருக்கு சொந்தமான நிலத்திற்குள் புகுந்துள்ளது. இதனிடையே அந்நிலத்தில் நெல் அறுவடைப்பணி கூலி ஆட்களை வைத்து நடைபெற்று வந்தது. அப்போது பாம்பின் இரைச்சல் சத்தம் கேட்டு கூலி ஆட்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதைகண்ட விவசாயி ராஜா அதிர்ச்சியடைந்து உடனடியாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். இதன்பின் வனச்சரகர் மற்றும் வனக்காவலர்கள் மலைப்பாம்பை மொரப்பூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.