கோவை, டிச.1- குடிநீர் குழாய் பதிக்க சூயஸ் நிறுவனம் பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாய் உடைந்தது. கடந்த 15 நாட்களாகியும் குழாயை சரிசெய்யாததால் உடைந்த குழாய் நீர் வெளியேறி வீணாகிறது. இதனால் குடி நீர் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோவை மாநகராட்சி 64ஆவது வார்டு, கணேசபுரம், சுப்பையன் வீதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சூயஸ் குழாய் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அப்போது பழைய குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால் சரி செய்யப்படவில்லை. இதனை மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வ தில்லை. இந்நிலையில், கடந்த வாரம் புதனன்று குடிநீர் விநியோகத்தின் போது, மீண்டும் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், குறைந்த அழுத்ததில் விநியோ கிக்கபடுவதால் மேடான பகுதிகளில் குடிநீர் சரியாக வருவதில்லை. எனவே, மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக உடைந்த குழாயை சீரமைத்து, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.