districts

img

அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தாராபுரம்,  நவ. 2 - தாராபுரம் 14 ஆவது வார்டு பொதுமக்கள்  அடிப்படை வசதி கோரி மனு அளித்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்காததால் சாலைமறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 14  ஆவது வார்டு நேதாஜி தெருவில் 100க்கும்  மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 400க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற னர். இங்கு முறையாக சாக்கடை வசதி மற்றும்  கான்கிரீட் சாலை இல்லை. இதுகுறித்து அதி காரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை யடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாக்கடை மற் றும் கான்கிரீட்ரோடு வசதி உட னடியாக செய்து தரக்கோரி சின்னக்கடை வீதி திருப்பூர் சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகு றித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார்   சாலை மறியலில் ஈடுபட்டவர் களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் நகராட்சி ஆணையாளர் ராமர் மற்றும் நகர் மன்ற தலை வர் பாப்பு கண்ணன் ஆகியோரிடம் பொது மக்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர். இதையடுத்து சாக்கடை மற்றும் கான்கிரீட் சாலை போடும் பணி விரைவில் தொடங்க  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை  தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் தற்கா லிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.