districts

img

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட மாநாடு

திருச்சிராப்பள்ளி, ஜூன்,2-சிஐடியு மாநகர் மாவட்ட 14வது மாநாடு திருச்சியில் ஞாயிற்று கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை மூத்த தோழர் இ.பி.கிருஷ்ணமூர்த்தி ஏற்றினார். சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைசெயலாளர் ராமர் வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன் துவக்கவுரையாற்றினார். செயலாளர் அறிக்கையை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் வாசித்தார். வரவு -செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்தார்.மாநாட்டில் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவராக ராமர், செயலாளராக ரெங்கராஜன், பொருளாளராக ராசேந்திரன் உள்பட 21 நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.தொழிலாளர் நலவாரியத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய பணப்பயனை காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை தீர்மானக்குழு சீனிவாசன், ராமச்சந்திரன், வீரமுத்து, மாதவன், மகேந்திரன், பக்ருதீன்பாபு, பிரமிளா, இ.பி.செல்வராஜ், ஆட்டோ மணிகண்டன், உள்ளாட்சி மாறன், வரவேற்புக்குழு தலைவர் கணேசன், வரவேற்புக்குழு பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்மொழிந்தனர். சிஐடியு மாநில செயலாளர் ஜானகிராமன் நிறைவுரையாற்றினார். முன்னதாக வரவேற்புக்குழு செயலாளர் செல்வி வரவேற்றார். சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் சந்திரன் நன்றி கூறினார்.