இ - பாஸ் நடைமுறை: 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகை வருகை
உதகை, அக்.1- நீலகிரியில் இ - பாஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் செப் டம்பர் மாதம் வரை 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற னர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற் கும் மேற்பட்டோர் வருகின்றனர். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வரு கையில் கட்டுப்பாடுகளை கொண்டுவதற்காக முதல் கட்ட மாக இ-பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று முதல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப் பட்டன. இந்த இ-பாஸ் நடைமுறை மேலும் கடந்த செப்டம் பர் 30 ஆம் தேதியன்று வரை இ-பாஸ் எடுத்துவர கால அவ காசம் நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது மறு அறிவிப்பு வரும் வரை நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இ-பாஸ் நடைமுறைப் படுத்தப்பட்டதில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் 13 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கூடு விநியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு
திருப்பூர், அக்.1- பட்டுக்கூடு உற்பத்தியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று உள் ளது. இந்த முறைகேட்டை களைந்து பட் டுக்குழு உற்பத்தி விவசாயிகளின் நலன் களை பாதுகாக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவ சாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் எம்.செல்வராஜ், அண்மையில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜிடம் அளித்த மனுவில், உலகளவில் பட்டுக்கூடு உற் பத்தி தரத்தின் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்தது. குறிப்பாக, வெண் பட்டு கூடு உற்பத்தியும், அதன் தரமும் சிறந்து விளங்கிய இடமாக திருப்பூர் மாவட்டம் முதன்மை பெற்றுத் திகழ்ந் தது. எனினும் பல்வேறு நிர்வாகக் குளறு படி, ஊழல் முறைகேடு காரணமாக தற்போது நான்காவது இடத்திற்கு தள் ளப்பட்டுள்ளது. பல மாவட்ட பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகளுக்கு, திருப்பூ ரில் இருந்து தான் அதிகளவு இளம் பட்டுப்புழுக்கள் கொடுக்கப்பட்டு வந் தன. எனினும் இந்த மாவட்டத்தில் உள்ள இளம் புழு மையங்கள் ஒன்றிய, மாநில அரசுகள் காட்டுகிற அறிவியல் சார்ந்த விதிமுறைகளை கையாளுவதில்லை. லாபம் ஒன்றே இலக்காக வைத்து தர மில்லாத இளம் புழுக்களை விவசாயி களுக்கு கொடுத்து வருகின்றனர். இத் தகைய இளம் புழு விநியோகத்திள் முறைகேடுகள் செய்யப்படுகின்றன. ரசீ துகளை முறைப்படுத்தாமல் பல கோடி ரூபாய் ஊழல் செய்யும் நிலை தொடர் கிறது. இதுதொடர்பாக ஆதாரப்பூர்வமாக மனுக்களை அனுப்பியும், போராட்டங் களும் நடத்தியுள்ளோம். ஆனால், இளம்புழு மையங்கள் மீது எந்தவித மான மேல் நடவடிக்கையும் இல்லை. இதனால் விரக்தி அடைந்த பட்டு விவ சாயிகள் இந்த தொழிலை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். எனவே, இளம் பட்டுப்புழு மையங்க ளில் நடைபெறும் முறைகேடுகளை மற் றும் ஊழல்களை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
உடுமலை, அக்.1- சிபிஎம் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட கிளைச் செயலா ளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியத் திற்குட்பட்ட கிளை மாநாடுகள் நடைபெற்று, செயலா ளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மருள்பட்டி கிளைச் செயலாளராக ஈஸ்வரன், கண்ணமநாயக்கனூர் கிளைச் செயலாளராக திருமலைசாமி (எ) இளையபாரதி, மலையாண்டி கவுண்டனூர் கிளைச் செயலாளராக ராமசாமி, எளையமுத்தூர் கிளைச் செயலாளராக மாரியம்மாள், இடைக்காடு கிளைச் செயலாளராக செந்தில் (எ) இளங் கோவன், குரல்குட்டை வடக்கு கிளைச் செயலாளராக தட்சிணாமூர்த்தி, தெற்கு கிளைச் செயலாளராக செந்தில் குமார், மாதர் கிளைச் செயலாளராக நாகரத்தினம், முருக்கத் திபள்ளம் கிளைச் செயலாளராக ஆண்டமுத்து, ஆலம்பா ளையம் கிளைச் செயலாளராக மாரியம்மாள், பள்ளபாளை யம் கிழக்கு கிளைச் செயலாளராக ரத்தினகுமார், பள்ளபா ளையம் மேற்கு கிளைச் செயலாளராக பி.எஸ்.சுந்தரம், ஜல் லிப்பட்டி கிளைச் செயலாளராக மாணிக்கவாசகம், தளி கிளைச் செயலாளராக சுப்பிரமணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். பொன்னாலம்மன் சோலை கிளைச் செயலாளராக அருண்பிரகாஷ், ஜே.என்.பாளையம் கிளைச் செயலா ளராக காமராஜ், எரிசனம்பட்டி கிளைச் செயலாளராக மணிக் குமார், வல்லகுண்டாபுரம் கிளைச் செயலாளராக வஞ்சி முத்து, தேவனூர்புதூர் கிளைச் செயலாளராக மாரிமுத்து, செல்லப்பம்பாளையம் கிளைச் செயலாளராக பிரபுராம், கொடிங்கியம் கிளைச் செயலாளராக ஈஸ்வரன், சாலையூர் கிளைச் செயலாளராக காளிமுத்து, சர்கார்புதூர் கிளைச் செயலாளராக மலையாண்டிசாமி, பெரியவாளவாடி கிளைச் செயலாளராக செந்தில்குமார், பூலாங்கிணர் கிளைச் செயலா ளராக சக்திவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.