திருப்பூர், செப்.6 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநி லக்குழு உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினருமான எழுத்தா ளர் தி.மு.ராசாமணியின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பி டிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையம் முன்பாக அவரது உருவப்படம் வைக்கப் பட்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட் டத் தலைவர் பி.ஆர்.கணேசன் தலைமை ஏற்றார். தி.மு.ராசாமணியின் பணிகளை நினைவு கூர்ந்து த.மு.எ.க.ச மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் ஆகியோர் உரையாற்றி னர். இதில் த.மு.எ.க.ச. மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்று நினைவஞ்சலி செலுத் தினர்.