திருப்பூர், செப்.22- தோழர் பி.ராமமூர்த்தி யின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் முன்னாள் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னருமான தோழர் பி.ராம மூர்த்தியின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியம், வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் செ.மணிகண்டன், துணைத் தலைவர் எஸ்.ராம்கி, துணைச்செயலாளர் வீ. பாலசுப்பிரமணியம், மாநகரத் தலைவர் எஸ். கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.