திருப்பூர், ஜன. 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினராகவும், கைத்தறி மற்றும் தூய்மை பணி யாளர்கள் சங்க செயலாளராகவும், நகராட்சி துணைத் தலைவராகவும் பணியாற்றிய கே.பொன்னுசாமியின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் - அவிநாசி சாலையிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலை யம் முன்பு செவ்வாயன்று நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலு வலக கிளைச் செயலாளர் ப.சௌந்தர பாண்டியன் தலைமை வகித்தார். இதில் பொன்னுசாமியின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியு மாவட்ட செயலா ளர் கே.ரங்கராஜ் நினைவு உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்ட தலை வர் சி.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உன்னிகிருஷ்ணன், டி.ஜெயபால், மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், பி.ஆர்.கணேசன், ஆர். காளியப்பன், ஆர்.மைதிலி, ஆ.சிகாமணி உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருப்பூர், திருமலை நகர் மற்றும் நெசவாளர் காலனி கிளைகள் சார்பிலும் தோழர் கே.பொன்னுசாமி நினை வஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.