districts

தொடரும் குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி

இம்பால், ஜூன் 16- மணிப்பூரில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் 11 பேர் உயிரிழந் துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலை யில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத் தில் உள்ள காமென்லோக் என்ற கிராமத்தில் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது. மணிப் பூர் சட்டமன்றத் தேர்தலையொட்டி, பெரும் பான்மை சமூகமான ‘மெய்டெய்’ மக்களின்  வாக்குகளைப் பெறுவதற்காக, அவர்க ளுக்கு பழங்குடி அந்தஸ்து தருவதாக பாஜக பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது. பாஜக- வின் இந்த அறிவிப்புக்கு எதிராக, குக்கி - நாகா உள்ளிட்ட பழங்குடி அமைப்புக்கள் போராட் டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டமானது. ஒருகட்டத்தில் மெய்டெய் மற்றும் பழங்குடி யினருக்கு இடையிலான நேரடி மோதலாக மாறி, மாநிலம் தழுவிய வன்முறையாக உரு வெடுத்தது. மோதல், படுகொலை, துப்பாக் கிச்சூடு சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வாகனங் கள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 20  ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத் தப்பட்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷா  3 நாட்கள், மணிப்பூரிலேயே முகாமிட்டும்,  ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை கட் டுக்குள் வந்தபாடாக இல்லை.  மாநில ஆளுநர் அனு சுயா உய்கே தலை மையில் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதி களை உள்ளடக்கிய அமைதிக்குழு ஒன்றும்  அமித்ஷா-வால் அறிவிக்கப்பட்டது. 51 பேர்  குழுவில் இடம்பெறச் செய்யப்பட்டனர். ஆனால், பாஜக முதல்வர் பைரேன் சிங் குழு வில் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து, குக்கி சமூகத்தினர், அமைதிக்குழு கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனிடையே மணிப்பூரில் வழக்கம் போல வன்முறை தொடர்ந்து வருகிறது. புதனன்று இரவு 10.30 மணியளவில், பழங் குடி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுக்கள் நடத்திய குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட் டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படு காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத் தில் உள்ள காமென்லோக் என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. முதலில், காமென்லோக் கிராமத்தில் உள்ள வீடுகள் மீது ஆயுதக்குழுக்கள், குண்டுகளை வீசி உள்ளனர். இதில், வீடுகளில் இருந்த பலர்  உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள் ளனர். இந்த குண்டு வீச்சில் இருந்து தப் பிக்கும் நோக்கில் வீட்டை விட்டு வெளியே  வந்தவர்கள் மீது ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள் ளனர். இதிலும், பலர் உயிரிழப்பிற்கும், படு காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றனர். மணிப்பூர் பெண் அமைச்சர் நெம்சா கிப் ஜெனின் வீடும் வன்முறையாளர்களால் தீக் கிரையாக்கப்பட்டுள்ளது. மெய்டெய் இனக் குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து கருத்து தெரிவித் துள்ள சிஎல்பி (Congress Legislature Party) தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓக் ராம் இபோபி, “மணிப்பூரில் சமீபத்தில்  சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜக  மூத்த தலைவர்கள் பலரும் மணிப்பூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால், இன்று  அவர்கள் யாரும் இங்கு வருவதில்லை. மே 3  முதல் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தும் பிரதமர் மோடி இதுகுறித்து பேச மறுக்கிறார். 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் தில்லி சென்று இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரில் வலியுறுத்த  இருக்கிறோம். மாநில அரசும், இந்த வன் முறை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என கூறி யுள்ளார்.