தருமபுரி, பிப்.21- செம்மனஅள்ளி அருகே 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம், செம்மன அள்ளி அருகே ஜக்குப்பட்டியில், தரும புரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் சி.சந்திர சேகர், பட்டனூரைச் சோ்ந்த பள்ளி ஆசி ரியர் கிருஷ்ணன், ஆராய்ச்சி மாணவர் கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப் போது நடுகற்கள் கண்டெடுக்கப்பட் டன. இதுகுறித்து வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் சந்திரசேகர் கூறு கையில், ஜக்குப்பட்டி, பெருமாள் கோவில் அருகே 10 ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த இரண்டு நடுகற்கள் உள் ளன. முதல் நடுகல்லில் உயரமாகவுள்ள ஒருவர் போா்க்களத்துக்குப் போரிட செல்வது போன்று செதுக்கப்பட்டுள் ளது. அந்த வீரா் ஒரு அரசராக இருப்ப தற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில் அரசர் அணியும் ஆபரணம் போன்ற நகை ஒன்று அந்த மனிதரின் கைகளில் உள்ளது. அவர் இடது கையில் வில்லை ஏந்தியவாறு வலது கையை பின்னோக்கி மடக்கிவைத்து காணப்படுகிறார். அதாவது ஒரு மனி தன் வேகமாக நடக்கும்போது இருக் கக்கூடிய அசைவுகள்போல அந்த உரு வம் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையின் மணிக்கட்டில் இரண்டு காப்பு கள் காணப்படுகின்றன. வலது கையில் அம்பு பிடித்தவாறு உள்ளார். அவரது கழுத்தில் நகை இல்லை என்பதால், அப்பகுதியைச் சேர்ந்த இனக்குழுத் தலைவராக இருந்திருக்கலாம். அதே சமயம் ஒரு பழங்குடியினத்தின் கலா சாரத்தை உள்ளடக்கிய நடுகல்லாக அது காணப்படுகிறது. இரண்டாவது நடுகல் அப்பகுதி யில் போர் நடைபெற்றதைப் பிரதிபலிக் கும் வகையில் உள்ளது. அந்த நடுகற் கள் ஆநிரையை மீட்கும்போது ஏற்பட்ட போரில் வீரர் ஒருவர் இறந்ததைப்போல தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளது. அந்த நடுகல்லில் ஒரு வீரன், கால் களை இழந்து தரையில் விழுந்து கிடப் பதுபோல காணப்படுகிறார். ஒரு கையில் வில்லும், மறுகையில் அம்புட னும் உள்ளார். அவரது விலாவில் பாய்ந்த ஓர் அம்பு உடலின் முன்பகுதி வழியாக வெளியே வந்ததுபோல வடி மைக்கப்பட்டுள்ளது. அந்த வீரரின் கால் அருகே மற்றொரு வீரா் இறந்துகிடப்பது போல ஒரு சிறிய உருவம் தென்படு கிறது. எனவே, ஆநிரை மீட்டல் காலத் தில் ஏற்பட்ட பூசலில் வீரர்கள் இறந்ததை குறிக்கும் வகையில் இந்த நடுகல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த வீரர் சமு தாய தலைவருடன் சேர்ந்து போரிட் டவர்களில் முக்கியமானவராக இருந்தி ருக்கலாம் என்பதால் அவருக்கும் நடு கல் எழுப்பப்பட்டுள்ளது, என்றார்.