கம்பைநல்லூர் பேரூராட்சியில் நிறுத்தப்பட்டுள்ள நூறுநாள் வேலையை உடனடியாக செயல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்டத் தலைவர் கே.கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஜி.பாண்டியம்மாள், இ.கே.முருகன், மனோகரன், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.