districts

100 நாள் வேலை திட்டத்தில் தொடரும் முறைகேடு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து ஊழலை தடுக்குமா?

திருப்பூர், ஜூன் 27 – திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு  ஊராட்சிகளில் கிராமப்புற நூறு நாள்  வேலைத் திட்டத்தில் லட்சக்கணக் கான ரூபாய் முறைகேடு செய்யப்படு வதாகவும், இந்த முறைகேடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்லடம் ஊராட்சி ஒன்றியம், ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சியில் பணித்தளப் பொறுப்பாளர், வேலைக்கு  வராதவரின் நூறு நாள் வேலைத் திட்ட  அட்டையைப் பயன்படுத்தி வேலை செய்ததாகக் காட்டி முறைகேடு செய்வ தாக அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க பல்லடம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ஆனந்தராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கூறி யிருந்தார்.  அதேபோல் செம்மிபாளையம் ஊராட்சியிலும் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் வசதி படைத்த பலரது பெயர் களில், குறிப்பாக கல்லூரி விரிவுரையா ளர், கட்டிட காண்டிராக்டர் உள்ளிட் டோர் பெயர்களில், வேலை அட்டை  பதிவு செய்து வைத்து, வங்கிக்கணக் கில் லட்சக்கணக்கில் பணம் பெறப்பட் டுள்ளதாக அந்த ஊராட்சியைச் சேர்ந்த  வேணுகோபால் என்பவர் மாவட்ட ஆட் சியரிடம் புகார் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டி ருக்கிறார்.

 பல்லடம் ஒன்றியத்தில் உள்ள இரண்டு ஊராட்சிகளில் நூறு நாள் வேலைத் திட்ட முறைகேடுகள் குறித்து  திங்களன்று ஒரே நாளில் ஆட்சியரிடம் புகார் கூறப்பட்டிருக்கும் நிலையில், இங்கு மட்டுமல்ல, பல்வேறு ஊராட் சிகளிலும் இது போன்ற முறைகே டுகள் இத்திட்டத்தில் நடைபெற்று வரு வதாக பல்வேறு தரப்பினரும் தெரி வித்தனர். இது பற்றி விசாரித்தபோது ஊராட்சி களில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட் டோர், ஒவ்வொருவரும் தலா 10 பேரின்  வேலை அட்டைகளை வாங்கி வைத்துக்  கொண்டு, அந்த அட்டைக்குரியவர்கள் வேலைக்கு வராமலேயே நூறு நாள்  வேலைத் திட்டத்தில் வேலை செய்த தாக காட்டி பணம் பெறப்படுகிறது. இது  தவிர பணித்தளப் பொறுப்பாளர்கள் தங்கள் வசம் ஓரிரு வேலையாட்களின் அட்டைகளை எடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் சம்பளப் பணத் தைப் பெற்றுக் கொள்வதுண்டு. அவர் கள் மட்டுமின்றி ஊராட்சி ஒன்றிய அலு வலகங்களில் வேலை செய்யக்கூடிய இந்த திட்டத்திற்கான கணினி இயக்கு நர்கள் உள்ளிட்டோர் கூட வேலை அட் டையை வாங்கி வைத்துக் கொண்டு, அதன் மூலம் சம்பளப் பணத்தை பெறு வதுண்டு என்றும் இத்திட்டத்தில் வித விதமாக நடைபெறும் முறைகேடுகளை  சமூக ஆர்வலர்கள் பட்டியலிட்டனர்.

இது மட்டுமின்றி நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற நோக் கத்தில், சில கட்டுமானப் பணிகள் கூட ஒதுக்கப்படுகிறது. பொதுவாக நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் கடினமான கட்டுமானப் பணிகளை செய்ய முடியாத நிலையில், குறிப் பிட்ட அளவிலான வேலை அட்டை களை சம்பந்தப்பட்ட கட்டிட ஒப்பந்ததா ரர்கள் வாங்கி வைத்துக் கொண்டு, அதன் மூலம் வேலை முடிந்த பின் திட் டப் பயனாளிகள் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள் வதும் நடைபெறுகிறது. இது போன்ற நேர்வுகளில் திட்ட மதிப்பீடு சுமார் ரூ.25  லட்சம் வரை இருக்கும்போது, சுமார் 10  முதல் 20 சதவிகிதம் பணிகள் நூறு நாள்  வேலைத்திட்டத்தின் மூலம் செயல்ப டுத்த வேண்டும். அதாவது சுமார் ரூ.5  லட்சம் வரை நூறு நாள் வேலைத் திட்டப்  பணியாளர்களுக்கு ஒதுக்கப்படும்.  அந்த தொகையை ஒப்பந்ததாரர்க ளுக்கு நேரடியாக தர முடியாது. அப் போது அவர்கள் திட்டப் பயனாளிகள் வேலை அட்டையை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு அவர்க ளது வங்கிக்கணக்கில் பணம் வரவு ஆன வுடன், அவர்களுக்கு சிறு தொகையை  கொடுத்துவிட்டு மீதி தொகையை எடுத் துக் கொள்வார்கள் என்றும் சில  ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். நோக்கம் உயரியதாக இருந்தா லும், நடைமுறைப்படுத்த இயலாத, விதிமீறலுக்கு அரசின் விதிமுறைகளே காரணமாகி விடுகின்றன. இவ்வாறு பல விதங்களில் நூறு நாள் வேலைத் திட்டங்களில் முறைகேடுகள் நடை பெறுவதாக ஊராட்சி நிர்வாகத்தார், நூறு நாள் வேலைத் திட்ட பயனாளி கள், விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர் ஆகியோர் தெரிவித்தனர். இத்திட்டத்தில் வேலை அட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு ஆண் டுக்கு நூறு நாள் வேலை தர வேண் டும். சட்டப்படி நாளொன்றுக்கு ரூ.294  சம்பளம் தர வேண்டும். ஆனால் நடை முறையில் அதிகபட்சம் ரூ.280 வரை யும், பெரும்பாலான ஊராட்சிகளில் சரா சரியாக ரூ.250 என்ற அளவிலும் சம்ப ளம் தரப்படுகிறது. தற்போது மேலே சொன்னபடி கணக்கிட்டால் ஒரு ஊராட் சியில் குறைந்தது நூறு பேரின் வேலை அட்டையை முறைகேட்டுக்குப் பயன் படுத்துவதாகக் கொண்டால், குறைந் தபட்சம் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் அள வுக்கு கையாடல் செய்யப்படும் நிலை  உள்ளது.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட் டணி ஆட்சிக் காலத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி  கட்சிகளின் வலியுறுத்தல் காரணமா கவே கிராமப்புற பட்டினிச்சாவு நிகழக் கூடாது, கொடும் வறுமையில் சிக்கி  இருக்கும் ஏழைகளின் துன்பத்தைக் குறைக்க வேண்டும் என்ற உன்னத மான நோக்கத்தில் இத்திட்டம் நடை முறைக்கு கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் கிராமப்புறங்களில் நல்ல பலனைக் கொடுத்தது. பொதுவாக தமிழகத்தில் வேலை வாய்ப்பு வழங்கும் மாவட்டம் என திருப்பூர் மாவட்டத்துக்கு பெயர் இருந் தாலும், திருப்பூரைச் சுற்றி இருக்கக் கூடிய பல கிராமங்கள் இன்றும் வறுமை யின் பிடியில்தான் சிக்கியிருக்கின்றன. அங்குள்ள ஏழை, எளியவர்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரமாக நூறு  நாள் வேலைத் திட்டம் பயன்பட்டு வரு கிறது. இதிலும் ஊழல், முறைகேடு என் பது வேலை வாய்ப்புப் பெற வேண்டிய  ஏழைகளின் சம்பளம் என்பதுதான் மிக  மோசமான விசயம். எனவே மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ், செம்மிபாளையத்தில் நடைபெற்ற   முறைகேடுகள் பற்றிய ஆய்வறிக்கை கேட்டுப் பெறுவதுடன் மாவட்டம் முழுவ தும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முறை கேடுகளைக் களைய முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கமும்  இவ்விசயத்தில் அடுத்தக்கட்டமாக கள  ஆய்வு செய்து இயக்கம் நடத்துவதற்கு  பேசி முடிவு செய்யப்படும் என்று அந்த சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ. பஞ்சலிங்கம் கூறினார்.