சேலம், டிச.22- 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கொங்கணா புரம் வட்ட 4 ஆவது கோரிக்கை மாநாடு கொங்கணாபுரம் சமு தாயக்கூடத்தில் ஒன்றிய தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை உதவித்தலைவர் ஆர். கந்தசாமி ஏற்றி வைத்தார். மாநாட்டை மாவட்ட செயலாளர் ஜி. கணபதி துவக்கி வைத்தார். அறிக்கைகளை ஒன்றிய செயலா ளர் சி.எஸ்.பழனியப்பன், ஒன்றிய பொருளாளர் அமுதா ஆகி யோர் முன்வைத்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் எஸ்.முத்துசாமி, விவசாய சங்க உதவிச்செயலாளர் எஸ். வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இந்த மாநாட்டில், 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண் டும். கொங்கணாபுரம் பேரூராட்சி மக்களுக்கும் இத்திட் டத்தை விரிவுபடுத்த வேண்டும். தேசிய அளவில் விவசாய தொழிலாளிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட தலைவர் வி.தங்கவேல் உரையாற்றினார். இதில், ஏராளமான விவசாய தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.