ஈரோடு, பிப். 20- ஒன்றிய அரசிடம் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்து நூறு நாள் வேலை செய்ததற்கான கூலி பாக்கியை பெற்றுத்தா ருங்கள் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் விவசாய தொழிலாளர்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு வில், 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிக்கப்பட்டது. தற் போது அது படிப்படியாக சுருங்கி, ஆண் டுக்கு 50 நாட்கள் தான் வேலை அளிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 8 வாரங் களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இத னால் கிராமப்புற தொழிலாளர்கள் அன்றாட செலவுக்கே சிரமப்படுகின்றனர். மலைப் பகுதியில் உள்ள மக்களுக்கு விவசாயப் பணி களும் இல்லாத நிலையில் கடும் பொருளா தார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து, உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதேபோன்று, பட்டியலின, குறவர் இன மக்கள் அளித்த மனுவில், கன்னிமார்காடு, ஊத்துக்காடு பகுதிகளில் 200 குடும்பங்க ளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் குடிநீர், மயானம், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகு றித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.