திருப்பூர். மார்ச் 4- திருப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்துவரும் சுமார் 65 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 12 வாரங்க ளாக சம்பளம் தராமல் ஒன்றிய மோடி அரசு வஞ்சித்து வருகிறது. சுமார் ரூ.160 கோடி சம்பளத் தொகையை உடனே அந்த தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழுக் கூட்டம் எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், மாநி லக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு: திருப்பூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்யக்கூடிய பல ஆயிரக்கணக்கான தொழிலா ளர்களுக்கு ஒன்றிய அரசு சம்ப ளம் தராமல் பல வாரங்களாக நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளிலும் இந்த தொழிலாளர்கள் சம்பள பாக்கியை உடனே வழங்கக் கோரி போராட்டம் அறிவித்துள் ளனர். இந்த மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் தொழிலா ளர்கள் நூறு நாள் வேலை திட்டத் திற்கான வேலை அட்டை வைத்தி ருக்கின்றனர். இவர்களில் ஏறத்தாழ 65 ஆயிரம் பேர் தற்போது இத்திட் டத்தில் வேலை செய்து வருகின்ற னர். வறட்சிக் காலத்தில் விவசாயிக ளும் இத்திட்டத்தில் வேலை செய் யும் நிலை உள்ளது. தற்போது வறட்சி தலை தூக்கும் நிலையில் பெரும்பாலானோர் இந்த நூறு நாள் வேலை திட்டத்தை நம்பி யுள்ளனர். எனினும் நூறு நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு வேலை செய்த நாட்களுக்கு உடன டியாக சம்பளம் தராமல் ஒன்றிய மோடி அரசு கால தாமதம் செய்து வருகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், இத்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் பங்கேற்ற வேலை நாள், வேலை அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு சம்பளத் தொகையைத் தர வேண்டிய விபரத்தையும் உடன டியாக ஆன்லைன் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி விட்டதாகத் தெரி விக்கின்றனர். இந்த நிலையில் ஒன்றிய அரசு நேரடியாக தொழி லாளர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய சம்பளப் பணத்தை ஏறத்தாழ 12 வாரங்கள் வரை அனுப்பாமல் நிறுத்தி வைத்திருப் பது எந்த வகையிலும் நியாய மில்லை. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இத்திட்டத்தில் வேலை செய்திருக் கும் சுமார் 65 ஆயிரம் தொழிலா ளர்களுக்கு 12 வாரங்களுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கி மட்டும் ரூ. 160 கோடிக்கு மேல் தராமல் ஒன்றிய அரசு அநியாயமாக வஞ்சித்து வருகிறது. செய்த வேலைக்கான சம்பளம் விடுவிக் கப்படாத நிலையில், ஊரக வளர்ச்சித் துறை மூலம் புதிய வேலைகளைத் தொடங்குவ தற்கும் தயங்கும் நிலை உள்ளது. இதுவும் 1 லட்சத்து 12 ஆயிரம் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு அடுத்த அடியாக உள்ளது. ஏற்கெனவே விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும்
தொழில் பாதிப்பு போன்ற கார ணங்களால் கிராமப்புற உழைக்கும் மக்கள் மிகக்கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரு கின்றனர். இடதுசாரிகள் ஆதர வுடன் செயல்பட்ட ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத் தில்தான், பட்டினிக் கொடுமை யைத் தடுக்கும் நோக்கத்தில் நூறு நாள் வேலை சட்டம் நிறைவேற்றப் பட்டது. ஆனால் இந்த திட்டத்தை சிதைத்து சீர்குலைக்கும் நோக்கத் தில் ஒன்றிய அரசு செயல்படு கிறது. கடும் வறட்சியும் தலை தூக்கும் சிக்கலான நிலையில், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு உரிய சம் பள பாக்கியை ஒன்றிய அரசு உட னடியாக விடுவிக்க வேண்டும். இத்திட்டத்தில் அடுத்தக்கட்ட புதிய வேலைகளைத் தொடர்ந்து செய்யவும் உத்தரவாதப்ப டுத்த வேண்டும். இத்தொழிலாளர் களுக்கு உரிய சம்பளத் தொகையை ஒன்றிய அரசு உடனடி யாக வழங்குவதற்கு மாநில அர சும் தொடர் கவனம் செலுத்தி வலியு றுத்திக் கேட்டுப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செ யற்குழு கேட்டுக் கொண்டுள்ளது. கோவை மேற்கண்ட கோரிக்கைககளை வலியுறுத்தி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில், விதொச மாவட்டப் பொருளாளர் மகாலிங் கம், பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.ஏ. பட்டீஸ்வர மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.