நாமக்கல், நவ.10- தனியார் கல்லூரி சார்பில் திருச்செங்கோட்டில் 10 ஆயி ரம் மரக்கன்றுகள் நடும் விழா சனியன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறி யியல் கல்லூரி, ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை மற்றும் ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினியரிங் சங்கம் இணைந்து நடத்திய 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா சனியன்று, கேஆர்எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கேஆர்எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.சீனிவாசன், துணைத்தலைவர் சச்சின் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒளிரும் ஈரோடு அறக்கட்டளையின் தலைவர் சின்னசாமி கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்க மரங்களை நட்டு மனித வளத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்கு னர் பி.மோகன், கல்லூரி துணை முதல்வர்கள், இயக்குனர் கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.