இளம்பிள்ளை, மார்ச் 25- இடங்கணசாலை நகராட்சியில் ரூ.1.45 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள் ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 பவுன் பொது நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்ய அரசு உத்தரவு பிறப்பித்தார். இதற்காக கடந்த நிதி அறிக்கையில், நகைக்கடனுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி இடங்கணசாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 400 பேருக்கு, ரூ.1 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 377 மதிப்பில் நகைக்கடன் தள்ளு படி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு இடங்கணசாலை நகராட்சியில் உள்ள கடன்தாரர்களின் நகையை திருப்பித் தரும் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இதில், வங்கி செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.