சேலம், சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,642 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இதில் ஆட்சியர் செ.கார்மேகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.