சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து கோவை மாவட்டம், கணியூர் சுங்கச்சாவடியை திங்களன்று மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர். அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் உமர் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில், ஈடுபட்ட நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.