districts

img

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ரூ.7.50 கோடி புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம்

 கும்பகோணம், மே 10- கும்பகோணத்தை தலைமையிட மாகக் கொண்டு கடந்த 119 வருடங் குளாக செயல்பட்டு வரும் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிதியின் நிர்வாகத்திற்கும்  கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி பணியாளர் முன்னேற்ற சங்கத்திற்கும் இடையே நடைபெற்றது.  இதுகுறித்து நிதி நிறுவனத்தின் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் ராமலிங்கம், மேலாண்மை இயக்குநர் வேலப்பன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது: கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர் கள் நலன் கருதி எந்த கோரிக்கையை வைக்காமலேயே, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் வகை யில் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் நிர்வாகத்திற்கு கூடுதலாக வரு டத்திற்கு ரூ.7.50 கோடி செலவு ஏற்படும். இருப்பினும் ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகை யில் மேற்படி ஒப்பந்தம் செய்து கொள்ள பட்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் நிதி வனத்தின் புதிய கிளைகள் அறந்தாங்கி  மற்றும் குத்தாலத்தில் திறக்கப்பட் டுள்ளது. நிகழாண்டில் சென்னை செங்குன்றம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய ஊர்களில் புதிய கிளைகளை திறக்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் புதியதாக 32 கிளைகளை திறப்பதற்கு கம்பெனிகள் விவகா ரத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. கிளையின் வாடிக் கையாளர்கள் பயன்பெறும் வகை யில் தற்போதைய தொழில்நுட்பத் திற்கு ஏற்ற வகையில் புதிய மென்பொ ருள் மாற்றம் செய்வதற்கு  நிதி நிறு வனத்திற்கு சொந்தமாக சுமார் ரூ.2 கோடி செலவில் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிதிக்கு சொந்தமான இடத்தில் புதிய பொலிவுடன் கட்டடம் கட்டப் பட்டு அக்கட்டடத்தில் கும்பகோணம்  பஜார் கிளை ஏப்ரல் 24ஆம்  முதல் செயல் பட்டு வருகிறது. கடந்த நிர்வாகத்தால்  ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட  போனஸ் மற்றும் கருணைத் தொகை 66 சதவிகிதத்தில் இருந்து  9 சதவிகிதம் உயர்த்தி 75 சதவிகித போனஸ் புதிய நிர்வாகம் பொறுப் பேற்ற 2021 நவம்பர் 8 தேதி அன்றைய தினமே வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் 75 சதவிகித போனஸ் மற்றும் கருணைத் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய மொத்த தொகை முறையே ரூ.24 கோடி மற்றும் ரூ.24.12 கோடியாகும். புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற நவம்பர் 8 தேதியில் டெபாஸிட் நிலுவை  ரூ.2,983 கோடியாக இருந்து, அதன் பின்னர் தற்போது தேதி வரை ரூ.488 கோடி உயர்ந்து, இன்றைய தேதியில் ரூ.3.471 கோடியாக உள்ளது. அது போல் 2021 நவம்பர் 8 தேதி யில் கடன் நிலுவை ரூ.2,767 கோடியாக இருந்து, அதன் பின்னர்  தற்போது  ரூ.3242 கோடியாக உள்ளது.  ரூ.475 கோடி உயர்ந்து கடந்த நிர்வாகத்தால் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட 22 சதவிகிதம் பங்கு ஈவுத் தொகை புதிய நிர்வாகத்தால் 25 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ம் ஆண்டு ரூ.93 கோடி யாக இருந்த நிறுவனத்தின் லாபத்  தொகை இந்த ஆண்டு ரூ.105 கோடி யாக உயர்ந்துள்ளது.கடந்த நிதி யாண்டில் கம்பெனிகள் சமுதாய பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் பள்ளி களுக்கு அடிப்படை வசதிகளை மேம் படுத்துவதற்கும், மாணவர்கள் பயன் பெறும் வகையில் கணினி, மேஜை  நாற்காலிகள் மற்றும் மருத்துவமனை கள் கட்டுவதற்கும் மற்றும் ஆம்பு லன்ஸ் வாங்குவதற்கும் நிதியின் சார் பில் ரூ.1.55 கோடி செலவிடப் பட்டுள்ளது, என்றனர்.  நிகழ்ச்சியில் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன ஊழியர் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, செந்தில், ஆறுமுகம் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.