districts

img

கும்பகோணம் மாநகராட்சி 34 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் செல்வத்திடம் பொதுமக்கள் கோரிக்கை

கும்பகோணம், பிப்.6 - தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை  முன்னிட்டு கும்பகோணம் மாநகராட்சியின் 34 வது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆ. செல்வம்  போட்டியிடுகிறார். இந்நிலையில் மாநகராட்சியின் 34வது வார்டுக்கு உட்பட்ட தாராசுரம் மிஷின் தெருவில் சிபிஎம் மற்றும் கூட்டணிக் கட்சி யினருடன் அரிவாள், சுத்தியல், நட்சத்தி ரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகு தியை சேர்ந்த மல்லிகா என்கிற வாக்கா ளர், “நாங்கள் வசிக்கும் மிஷின் தெருவில்  பயன்படுத்தும் மினி டேங்க் இடிந்து சிதல மடைந்துள்ளது. நீங்க ஜெயித்து வந்து எங்களுக்கு சரி பண்ணி குடுங்க, நாங்க இருக்கிறோம்” என்று உணர்வுப்பூர்வமாக பேசினார். வேட்பாளர் ஆ.செல்வம், இது  தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவிப்ப தாக உறுதியளித்தார்.