districts

img

திருபுவனம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் சுப்ரமணியன் போட்டி

கும்பகோணம், பிப்.4 - தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வார்டு எண்:8 இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளர் சுப்ரமணியன் போட்டி யிடுகிறார்.  இதனைத் தொடர்ந்து திருபுவனம் பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவல ரிடம் சுப்ரமணியன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், மாவ ட்ட குழு உறுப்பினர் சா.ஜீவ பாரதி, ஜி.பக்கிரிசாமி, திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேந் திரன், ஒன்றிய குழு உறுப் பினர்கள் சேகர், சங்கர் மாதர் சங்க பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுப்ரமணியன், கைத்தறி நெசவு கூலி தொழிலாளி ஆவார். இவர் நெசவாளர்களுக்கான கூலி உயர்வு போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். அப்பகுதி திருபுவனம் நெச வாளர் தொழிலாளர் சங்கத் தின் தலைவராகவும் அரசு நல வாரிய திட்டங்களை முழு மையாக மக்களுக்கு சென்ற டைவதில் முழு சேவையும் செய்து வருபவர்.  இவர் வசிக்கும் திருபு வனம் கன்னி தோப்பு பகுதி யில் பொதுமக்கள் மத்தியில்  வரவேற்பைப் பெற்றவர்.  கட்சியின் முதுபெரும் மறைந்த தோழர் சிங்காரத்தின் வழி காட்டுதலின்படி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியில்  இணைந்து திருவிடைமரு தூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி  நாகஜோதி மற்றும் மகள், மகன் அனைவரும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை 
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை பேரூராட்சி 5  ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் வி.ரவி வெள்ளியன்று தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ரசிகா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.