districts

img

பயனற்ற நிலையில் மஞ்சள் பை தானியங்கி எந்திரம்

ஓசூர், ஏப். 5- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தையில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டது. இது ஓசூர் மாநகராட்சி மற்றும் தனி யார் நிறுவனத்தின் சி.எஸ்ஆர். நிதி ஒதுக்கீடு மூலம் செயல்பட வேண்டும். இந்நிலையில் எந்திரம் நிறுவப்பட்டு, 2 நாட்கள் மட்டுமே  செயல்பட்ட நிலையில், மேற் கொண்டு புதிய பைகள் நிரப்பப் படாததால் பொதுமக்களுக்கு பயனற்ற நிலையில் உள்ளது. உழவர் சந்தைக்கு வரும் பலர்,  மஞ்சள் பையை பெற அந்த  இயந்திரத்தை நாடிச் செல்வதை யும், ஆனால் பைகள் இல்லாத தால் ஏமாற்றமடைந்து நெகிழிப் பையை தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து அந்த இயந்திரம் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.