கிருஷ்ணகிரி மார்ச் 21- அரசு தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்கலாம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் பெ.சண்முகம் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவடடம் சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம், ஊராட்சிக்கு உட்பட்ட 3034 ஏக்கர் வளமான நிலங்களை மாவட்ட நிர்வாகம் சிப்காட் அமைக்க கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. இதனால் 2000 விவசாயிகளின் 10ஆயிரம் குடும்பங் கள் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். மேலும் 15 கிராமங்கள், 2000 பம்பு செட்டுகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகள், பதினைந்துக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 4 ஊராட்சி பள்ளிகள் பள்ளிகள், பத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், உட்பட இப்பகுதியின் மொத்த வாழ்வாதாரமே பறிபோகும் ஆபத்து உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மக்கள் விரோத விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து கடந்த 4 மாதங்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திங்களன்று (மார்ச் 21) “வளமான எங்கள் விவ சாயம் நிலத்தில் சிப்காட் அமைத்திட அனுமதிக்க மாட்டோம்’’ என்று வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தி னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
வளமான நிலங்களை கையகப்படுத்தாதீர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம் தமிழக அரசின் தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சிறு குறு விவசாயிகளின் வளமான நிலங்களை சிப்காட் அமைக்க கையகப்படுத்துவதை தான் எற்கமுடியாது. தமிழகத்தில் எவ்வளவு சிப்காட்கள் உள்ளது, அதற்கு எவ்வளவு ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது, அதில் எவ்வளவு நிலத்தில் தொழிற் சாலைகள் உள்ளன எவ்வளவு நிலம் பயன்படுத்தப்படாமல் தரி சாக உள்ளது, சிப்காட் மூலம் எவ்வ ளவு தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது, என்பது குறித்து சட்டப்பேரவையில் தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். ஏற்கனவே கையகப் படுத்திய நிலத்தில் ஒரு லட்சம் ஏக்கர் இன்னும் தரிசாகக் கிடக்கிறது. தமிழகத்தில் அரசின் கணக்குப்படி 72 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த நிலங்களை விட்டுவிட்டு உத்தனப்பள்ளி விவசாயிகளின் வளமான நிலங்களை சிப்காட் அமைக்க கையகப்படுத்துவது நியாயமல்ல. நாகமங்கலம் தனி யார் சிப்காட் உட்பட இன்னும் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ஏழைக ளின் வாழ்வாதாரமான சிறு பகுதி நிலங்களையும் பறித்து அவர்களது சோற்றில் மண்ணை அள்ளிப் போடுவது போல் மாவட்ட நிர்வாகம் நடந்துகொள்வது சரியல்ல என்றார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு பயன்படும் நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் இதையே பலமுறை கூறியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் முதல்வர் அறிவிப்புக்கு எதிராக வளமான உத்தனப்பள்ளி நிலங்களை சிப்காட்டிற்கு என்று கையகப்படுத்த முனைவது ஏன்? 1999ல் இயற்றப்பட்ட சட்டத்தை காட்டி மாவட்ட நிர்வாகம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதர வாக உத்தனப்பள்ளியில் உள்ள வளமான நிலங்களை அனுமதி யின்றி கையகப்படுத்த முயற்சி ப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. 1999 நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி அரசின் விதிக்கப்பட்ட நிலத்திற்கான விலை தவிர வேறு எதுவும் கிடைக்காது. இந்த சட்டத்தைப் பயன்படுத்துவது மிகப் பெரும் துரோகம். விவசாய பரப்பை அதிகரிப்போம் தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றுவோம் என்று வேளாண் பட்n ஜட்டில் தமிழக அரசு கூறியுள்ள நிலையில் உத்தனப்பள்ளி சிப்காட்டிற்கு வளமான விளைநிலங்களை எடுக்க முனைவது நியாயமல்ல என்றார் சண்முகம். இப்பகுதி விவசாயிகள் எந்தவித பிளவுவாத சக்திகளுக்கும் இடம் தராமல் ஒரே மனிதனாய் நின்று போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில துணைத் தலைவர் டெல்லி பாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் சபாபதி, சூளகிரி வட்டத் தலைவர் எம்எம் ராஜூ மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது இப்பகுதியில் சிப்காட் நிலம் எடுக்க அரசு ஆணை எதுவும் வரவில்லை, மேலும் விவசாயிகள் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்த படாது என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.