கிருஷ்ணகிரி, ஜன. 10- ஊத்தங்கரை வட்டம் சூரக்கள்மேடு பாதை மற்றும் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆடு மாடுகளுடன் கிராம மக்கள்: உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊத்தங்கரை அருகே பாவக்கல் பகுதியில் மூன்றம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சூரக்கள் கிராமத்தினர் காலம்காலமாக வனப்பகுதிக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் அந்த கிராம மக்கள் பயன்படுத்திவந்த பாதையை ஆக்கிரமித்து பாதை யில் பாறாங்கற்ககளையும், முள் மரத்தையும்ன் வெட்டி குறுக்கே போட்டுள்ளார். இத னால் அந்த கிராம மக்கள் பாதை யின்றியும், ஆடு, மாடுகளை மேய்க்க வழியில்லாமலும் அவதிப்படு கின்றனர். இதுகுறித்து கடந்த 4ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதையையும் மேய்ச்சலுக்கு பயன்பட்டு வந்த அரசு புறம்போக்கு வனப்பகுதியும் தனியார் ஆக்கிர மிப்பில் இருந்து மீட்டு மீண்டும் பாதையாக பயன்படுத்த அனு மதிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சூரக்கள் கிராம மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கால்நடைகளுடன் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர், சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வராஜ், துணை வட்டாட்சியர் அரவிந்த்குமார் மற்றும் வருவாய்த் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாதையையும், அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளையும் அகற்றி னர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.