districts

img

தக்காளி விலை கடும் வீழ்ச்சி: கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

தேன்கனிக்கோட்டை, நவ. 27- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்  கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப் பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதி களில் தக்காளி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு தக்காளி அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்க வில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு கூடை தக்காளி 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு கூடை தக்காளி 50 ரூபாய், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவ சாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தக்காளி அதிகளவில் விளைச்சல் இருப்பதால் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இத னால் வேதனையடைந்த தக்காளி விவ சாயிகள் தோட்டங்களில் தக்காளிகளை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். மேலும் பல விவசாயிகள் சாலையோரம் தக்காளிகளை வீசி விட்டுச் செல்கின்றனர். சாலை ஓரங்களில் கிடக்கும் தக்காளி பழங்களை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.