districts

img

பெட்ரோல் விற்பனை நிலையம்  அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

கிருஷ்ணகிரி, மே 26 - கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை பால் வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள மாவட்ட கூட்டுறவு  பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் ரூ.2 கோடி மதிப்பில்  நிறுவப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலைய தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை  அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். அமைச்சர் நாசர் பங்கேற்று, பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் வசந்தகுமார், ரீடெயில் சேல்ஸ் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொது மேலாளர் ஆதவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.