கிருஷ்ணகிரி, மே 13- ஓசூர் அருகே தாபா உணவகம் நடத்தி வரும் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியில் பெல்லட்டி சாலையில் தாபா உணவகம் நடத்தி வருபவர் ரஞ்சிதா (25). இந்நிலையில், சூளகிரி காவல் நிலைய முதல்நிலை காவலராக பணிபுரியும் முருகானந்தம் (25), மாரியப்பன்(30). ஆகிய இருவரும் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புத னன்று புகார் அளித்தார். அந்த புகாரில், சூள கிரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முருகா னந்தம், மாரியப்பன் ஆகிய இருவரும் தான் நடத்தி வரும் உணவகத்திற்கு அடிக்கடி வந்து சாப்பாடு வாங்கிச் சென்றதாகவும், பணம் கேட்டு மிரட்டி வந்த தாகவும் கூறியுள்ளார். மேலும், கடந்த 4ஆம் தேதி உணவகத்திற்கு வந்த அவர்கள், கர்நாடக மது வகைகளை விற்பதாகவும், கஞ்சா பொட்டலம் விற்ப தாகவும் பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி, தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால், தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டிருப்ப தாகவும், தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் மேற்பார் வையில் விசாரணை நடை பெற்று வருகிறது.